கேஜிஎப்-2 திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆன நிலையில் கேஜிஎப் -3 குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎப்-2 திரைப்படம், கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ₹1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்திய சினிமாவில் பாகுபலி-2, தங்கல் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படம் இதுவாகும்.
யஷ் நடிப்பில் வெளிவந்த இப்படம் ‘பீஸ்ட்’ படத்தை பின்னுக்குத்தள்ளி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. படம் 100 நாட்களை கடந்த நிலையில் கிளைமேக்ஸ் காட்சியின் தொடக்கமாக கேஜிஎப்-3 உருவாகவிருக்கிறது. இது உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என குறிப்பிட்டு படக்குழுவினர் கேஜிஎப்-2 படத்தின் கிளைமேக்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், எனக்கு ஒரு வாக்கு கொடு; நீ எப்படி வாழப்போறியோ எனக்கு தெரியாது; ஆனால் நீ சாகும்போது பெரிய பணக்காரனாக சாக வேண்டும் என்று தாய் கூறுகிறார். மேலும், கொடுத்த வாக்கை மறக்கவில்லை: இது சும்மா ஆரம்பம்தான் என மாஸ் என்ட்ரியுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.




