தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளுல் ஒருவர் ஆண்ட்ரியா. இவர் நடித்துள்ள அரண்மனை 3 படம் அக்டோபர் 14ல் ரிலீஸாக உள்ளது. அதோடு மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. இத்திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் ஆண்ட்ரியா. தனக்கு சரியென பட்டதை செய்யக் கூடியவர். எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் எளிதாக கடந்துபோகக்கூடியவர்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்ட ஒரு படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இடுப்புக்கு கீழே தொப்புளுக்கு அருகே பட்டாம்பூச்சி டாட்டூவை குத்தியுள்ள படத்தை தனது பேண்ட்டை இறக்கி ஆண்ட்ரியா பதிவிட்டுள்ளார். இது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதை பார்த்த ரசிகர்கள், ‛டாட்டூ போடுற இடமா அது? இல்லை அரண்மணை – 3 பிசாசு 2 படங்களை எங்களை பார்க்க வைக்கும் விளம்பர யுக்தியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.