நடிகர் சிம்பு இன்று சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கினார். அதில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
நடிகர் சிம்பு எப்போதும் தனது ரசிகர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பவர். இந்நிலையில் இன்று அவர் சமூக வலைதளக் கணக்கில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
நடிகர் சிம்புவுக்கு சமீபத்தில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெறாத நிலையில் அவர் தன் உடல் எடையைக் குறைப்பதற்கான பயிற்சியில் ஈட்டுபட்டிருந்தார்.
பின்னர், மாநாடு படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார் என்ற செய்திகள் வெளியான நிலையில் அவர் இயக்குநர் சுசீந்தரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார் என்ற தகவல்கள் வெளியானது. இதற்கு மாநாடு தயாரிப்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து சிம்பு நடிக்கும் புதிய படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதை இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் எஸ்டிஆர்-46 படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று டுவிட்டர், யுடியூப், இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் கணக்கைத் தொடங்கியுள்ளார். அவரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.