சுஷாந்த் மரண வழக்கில் மாடல் அழகியின் சகோதரரை கைது செய்து போதைபொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறுத்த வழக்கில் அவரது காதலி ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்காகப் பதியப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் பல முக்கிய நடிகர் நடிகைகள் கைதாகலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
குறிப்பாக போதைபொருள்களைச் சப்ளை செய்வதில் அவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதில் குறிப்பாக சுஷாந்த் சிங்குடன் நெருங்கிப் பழகிய மாடல் அழகி கேப்ரியல்ஸின் சகோதரர் தன் இவர்.
லேனாவலாவின் உள்ள சொகுசு விடுதியில் போலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேர் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.