தமிழ்ப் படத்திலிருந்து மணிரத்னம் பட நாயகி திடீரென விலகியுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைதாரி. இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதி மடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி வருகிறார். இதில் நடிக்க அதிதிராவ் ஒப்பந்தமாகியிருந்தார்.
லலித்குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால் கொரோனா காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
படத்தின் தொடக்க விழா பூஜையிலும் நடிகை அதிதிராவ் கலந்துகொண்டார். தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக துக்ளக் தர்பார் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிவிட்டனர்.
ஆனால் துக்ளக் தர்பார் படத்தில் இருந்து அதிதிராவ் திடீரென்று விலகி உள்ளாராம். கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடிகளால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லையாம்.இந்நிலையில் அதிதி ராவுக்கு பதிலாக விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ராஷி கண்ணாவை தேர்வு செய்துள்ளனர். நடிகை ராஷி கண்ணா ஏற்கனவே சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.