வைகைப்புயல் நடிகர் வடிவேலு ஒரு ஜீனியஸ் என்று நகைச்சுவை நடிகர் யோகிபாபு புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழில் யோகி என்றபடத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாபு. படத்தின் பெயரும் அவருடன் ஒட்டிக்கொண்டதால் யோகிபாபுவானார். நடிகர்கள் சந்தானம், வடிவேலு உள்ளிட்டோர் ஹீரோக்களாக மாறிவிட்டதால் காமெடியன்கள் விட்ட இடத்தை நிரப்பிக் கொண்டார் யோகிபாபு. தற்போது விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள பேய்மாமா படத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் நடிகர் யோகிபாபு கலந்துகொண்டு பேசும்போது, “இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இந்தப் படத்தில் என்னை கதாநாயகனாக நிறுத்தி உள்ளார். மிகவும் பயமாக இருக்கிறது. இந்தப்படம் முதலில் வடிவேல் நடிப்பதற்காக பண்ணியது என்று ஷக்தி சிதம்பரம் சொன்னார். உடனே நான் “வடிவேலு சார் ஜீனியஸ். அவருடைய இடத்தில் நான் எப்படி செட்டாவேன் என்று கேட்டேன்.
இந்தப்படம் வெற்றி அடைய எல்லோருடைய ஆதரவும், அன்பும் வேண்டும்.
படத்தின் டிரைலரில் சொன்ன மாதிரி நான் காமெடியன் தான்” என்றார்.
ஆண்டுக்கு 30 முதல் 40 படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு.