– ப. சிந்துஜா

கீதா என்ற பெண், தனது வாழ்க்கையில் நடந்த துன்பத்தையும் அனுபவத்தையும் கதையாகக் கூறுகிறாள். கீதா, ஒரு ஏழை அப்பாவின் மகளாகப் பிறந்தாள்.
கீதாவின் அப்பாவிற்கு மூன்று உடன்பிறந்த சகோதரிகள். கீதாவின் தாத்தாவிற்கு இரண்டு மனைவி. அதில் கீதாவின் அப்பாவும், முதல் அத்தையும் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள். மற்ற இரண்டு அத்தையும், முதல் மனைவியின் பிள்ளைகள்.
ஆனால் குடும்பத்தில் பிரிவினை தெரியாது. இதில் மூன்றாவது தங்கை, பாசம் மிக்க சகோதரி. முதல் இரண்டு தங்கை பாசம் இல்லாதவர்கள். இரண்டு சகோதரிகள் செல்வந்தராக வாழ்ந்தார்கள். கீதாவின் அப்பாவும் மூன்றாவது தங்கை கயல்விழியும் ஏழை. ஒரு வயிற்று பிள்ளைகள் போல, பாசத்தில் ஒற்றுமையாக இருந்தார்கள்.
கீதாவின் குடும்பத்தில், கீதாவின் அண்ணனுக்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. திருமணத்தில் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அப்போது கீதாவிற்கு, அவளது அத்தை மகன் திருமணம் நினைவுக்கு வந்தது. கீதாவின் அத்தை மகனுக்கு திருமண ஏற்பாடு செய்தனர். அப்போது கீதா 12-ஆம் வகுப்பு முடித்து விட்டாள். கீதாவிற்கும், கீதாவின் அத்தை மகனுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, இரு வீட்டாரும் கலந்து ஜாதகம் பார்க்கச் சென்றனர். ஆனால் கீதாவின் அத்தைக்கு துளி கூட மனமில்லை. காரணம் தனது அண்ணனிடம் பணம் இல்லாதது தான்.
கீதாவின் மூன்றாவது அத்தையும், கீதாவின் அப்பாவைப் போலத்தான் ஏழையாக இருப்பதால், அவர்களது உறவினர்கள் கீதாவின் அத்தையை மதிக்கவில்லை. பிறகு அத்தை மகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிவு செய்தனர்.
அத்தை மகன் திருமணம் நடைபெறும் நேரத்தில், கீதாவின் மனம் மிகவும் வேதனை அடைந்தது. தனது அப்பாவின் ஆசை நிறைவேறவில்லை என்கிற மனவருத்தம் தான்.
கீதா கல்லூரி படிக்கச் சென்றாள். முதல் பருவம் கடந்தாள். கீதாவின் மனதில் திடீரென காதல் மலர் பூத்தது. கீதாவின் தோழியான செல்வி, தனது அண்ணனை அறிமுகம் செய்தாள். அதன் மூலம் பேசி… காதலாக மாறி… காதலர்களாக மாறிவிட்டனர்.
கீதா கல்லூரி முடித்து விட்டாள். கீதாவின் வீட்டிற்கு காதல் விவகாரம் தெரிந்துவிட்டது. கீதாவை அவளது அண்ணன் அடித்து விட்டான்.
கீதாவின் அப்பா அவளை முழுமையாக நம்பினார். தன் மகள் தப்பு செய்திருக்க மாட்டாள் என்று நம்பிக்கையாக இருந்தார். பின்னர் கடைசியாக கீதா கல்லூரி முடிந்ததும், வீட்டில் தனது காதலை சொல்லிவிட்டாள். வீட்டில் காதலை ஏற்றுக் கொண்டார்கள்.
கீதாவிற்கு திருமணம் முடிவாகி விட்டது. கீதா கல்யாணப் பேச்சுவார்த்தை ஒரு போராட்டத்தில் தான் முடிந்தது.
கீதாவின் காதலன் வீட்டில் வரதட்சணை மிகவும் அதிகம் கேட்டனர். கீதாவின் வீட்டில் குறைவாகத்தான் தர முடியும் என, கடைசியாக கீதாவின் வீட்டின் முடிவின்படியே 10 பவுன் நகைக்கு, கீதாவின் காதலன் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர்.
கீதாவின் திருமணமும் விரைவாக முடிவடைந்தது. கீதாவின் அத்தை மகன் கல்யாணத்திற்கு, கீதாவின் வீட்டில் உதவி செய்தனர். ஆனால், கீதாவின் அத்தை வீட்டில், அந்த நன்றியை மறந்துவிட்டார்களே என்று கவலைப்பட்டனர்.
கீதாவின் அண்ணன் திருமணம் முடிந்து குழந்தைப் பிறந்தது. கீதா வீட்டில், அவளுடைய அண்ணனுக்கு திருமணக்கடன், கீதாவின் திருமணக்கடன் என்று கடன்பட்ட நிலையில், உறவுகள் யாருமே உதவி செய்யவில்லை.
ஆனால் கீதா வீட்டில், கீதா அத்தை மகன் திருமணத்திற்கு, கீதாவின் நகையைக் கொடுத்து உதவி செய்தனர். அந்த உதவியை கீதாவின் அத்தை வீட்டில் மறந்து விட்டார்கள்.
கீதா திருமணம் முடிந்து புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தாள். கீதாவின் கணவரின் அண்ணனுக்கு குழந்தை இல்லாத வருத்தம் எல்லோரிடமும் தெரிந்தது. 6 வருடம் குழந்தை இல்லை. எனவே கீதாவின் கணவரின் அண்ணி கருவுற்றாள். கீதாவும் கருவுற்றாள். குடும்பத்தில் இரட்டை மகிழ்ச்சி
பின்னர், நாள்கள் கடந்தது. கீதாவின் அக்காவிற்கு இரட்டை குழந்தைப் பிறந்தது. கீதாவும் குழந்தைப் பெற்றாள். குடும்பம் மிகவும் மகிழ்ச்சியடன் இருந்தார்கள். எல்லாம் கீதாவின் ராசியில் தான் என்று, மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கீதாவின் மாமியார் எல்லோரிடமும், என் மருமகள் ராசியானவள் என்று புகழ்ந்துப் பேசுகிறாள். இது கீதாவின் பிறந்த வீட்டிற்கு சேர்த்தப் பெருமை!
கீதாவின் இரண்டாவது அண்ணனுக்கு திருமணம் முடிவு செய்தனர். கீதாவின் பிறந்த வீட்டில் கடன் பிரச்சனை இல்லாமல், நல்ல வசதியுடன் வாழ்ந்தார்கள்.
கீதாவின் பிறந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார்கள். கீதாவின் குடும்பம் நன்கு வளர்ச்சி அடைந்தது. கீதாவின் மூன்றாவது அத்தையும் நல்ல நிலைமைக்கு வந்து விட்டனர்.
இந்தக் கதையில், கீதாவின் அத்தை கயல்விழி மட்டும் தான், இறுதிவரை தன் அண்ணனை விட்டுக்கொடுக்காமல், பாசத்துடன் இருந்தாள்.
பணத்தால் வெல்ல முடியாது… பாசத்தால் வெல்லலாம்… என்பதை கதையில் அறிய முடிகிறது.
எனவே கீதாவின் வாழ்வில் முதலில் துன்பத்தை அனுபவித்தாலும், இறுதியில் மகிழ்ச்சியின் பயணத்தை அடைந்தாள்.
முடிவு…
கீதாவின் வாழ்வில், மனிதர்கள் மதிக்கவில்லை. பணம் தான் மதிக்கப்படுகிறது. இந்தக் கதைக்கு ஏற்ப பழமொழி “பணம் பத்தும் செய்யும்” என்பது பொருந்தும்.
– கதைப் படிக்கலாம் – 28
இதையும் படியுங்கள் : அப்பா கிடைத்துவிட்டார்




