தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, அண்ணா பல்கலைகழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
மறுதேர்வு
பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் பெறாத தனியார் கல்லூரிகளுக்கும் இணைய வழியில் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. அனைத்து முதுகலை மற்றும் இளங்கலைப் படிப்புகளுக்கும் நவ.17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இணையவழித் தேர்வின் இடையே மின்சாரக் கோளாறு அல்லது இணையத்தில் பிரச்சினை காரணமாகத் தேர்வை எழுதாத மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பெற்றோர்களின் கருத்து கேட்புக்கு பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு