புதுச்சேரியில் செப்டம்பர் 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
![Puducherry government to give rice, money to parents as schools are closed due to COVID-19 - Hindustan Times](https://i0.wp.com/images.hindustantimes.com/rf/image_size_630x354/HT/p2/2020/07/18/Pictures/_13c2a90c-c8e7-11ea-beba-1c34f54d5354.jpg?resize=645%2C362&ssl=1)
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நாளை (17.09.2022) முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை (25.09.2022) 1ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிக்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் சுகாதாரத்துறையின் பரிந்துரையை ஏற்று விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.