ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித் தொகைப் பெற வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கருக்காகச் செயல்படுத்தப்படும் “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டம்” மற்றும் “பிற கல்வி உதவித் தொகை” திட்டங்களின்கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்காத ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் UMIS (University Management Information System) இணையதளத்தில் (https://umis.tn.gov.in/) வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




