தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களும் சேரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 16 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி அகாடமியில் இணைந்து பயிற்சி பெற முடியும். “என்.டி.ஏ.,வில் பெண்களை சேர்ப்பதற்கான முடிவு எடுத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். சீர்திருத்தங்கள் ஒரே நாளில் நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும். இந்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும் வரை காத்திருப்பதை விட பாலின சமத்துவத்தை உறுதி செய்வதில் அரசு முன்னெச்சரிக்கை அணுகுமுறையை எடுக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கூறினர்.