கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு 35,000 ஆயிரம் கோடி, தமிழகத்தில் சாலைத் திட்டத்திற்கு 1.03 லட்சம் கோடி என பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது.
பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் கீழ் 27 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான போர் தொடங்கும் என்றும் மேலும் 2 புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறிய நிர்மலா சீதாராமன் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு 35,000 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் 3,500 கிலோ மீட்டருக்கு சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு 63,246 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள் கட்டமைப்பு வசதிக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயும் நகர்புறத் தூய்மைத் திட்டத்துக்கு 1.14 லட்சம் கோடியும், காற்று மாசு கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு 2,217 கோடியும் மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. ரயில்வே துறைக்கு 1.10 லட்சம் கோடியும் பேருந்து வசதிகள் மேம்பாட்டுக்கு 18,000 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.