மும்பை மாநிலத்தில் பலூன் ஊதி விளையாடும்போது தொண்டையில் பலூன் சிக்கியதால், 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மாநிலத்தின் அந்தேரி பகுதியை சேர்ந்தவர் சூரஜ் நாக். இவரது மகன் 4 வயது மகன் தேவ்ராஜ். தேவ்ராஜ் தனது சகோதரர்களான அயன்ஷ் மற்றும் ஆதித்யா உடன், பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். சுமார் இரவு 10.30 மணியளவில், சூரஜ் தன் வேளையை முடித்து வீடு திரும்பியிருக்கிறார். அப்போது மூன்று பேரும் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த சூரஜ், வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
தேவ்ராஜ் படுத்துக்கொண்டே பலூனை வாயில் வைத்து ஊதிக் கொண்டிருந்திருக்கிறான். அப்பொழுது எதிர்பாராதவிதமாக, பலூன் வாயினுள் இழுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பலூன் தேவ்ராஜின் தொண்டையில் சிக்கிக் கொண்டதால், அவனுக்கு இருமல் ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்த சூரஜ், தனது மகனின் தொண்டையில் சிக்கிய பலூனை கையை விட்டு எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை. தேவ்ராஜ்-ன் தாயாரும் முயற்சி செய்துள்ளார். ஆனால் அவராலும் பலூனை எடுக்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் தேவ்ராஜ்விற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அவனை அந்தேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குப் பலூனை எடுக்க முடியாமல் போனதால், நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் தேவ்ராஜ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுப்பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : விளையாட்டு விபரீதமாகிடுச்சு…நல்ல வேளை பல்லு மட்டும் தான் போச்சு!! – உக்ரைனில் வாலிபருக்கு நடந்த சோகம்.