மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் டீச்சர்களாக மாறாதீர்கள் என்று விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி பதிவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாப் பாடகி ரிஹானா இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் முன்னாள் போர்ன் ஸ்டார் மியா கலிஃபா உள்ளிட்டோரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பியிருந்தனர். இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ரிஹானாவுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலரும் பதிலளித்து வருகின்றனர். ஆனால் ரிஹானாவுக்கு இந்திய பிரபலங்களாக நடிகை கங்கனா ரனாவத், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, நடிகர் அக்ஷய் குமார் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள நடிகை டாப்ஸி, ஒரு பதிவு உங்கள் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் டீச்சர்களாக மாறக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.




