’ஆபரேஷன் லோட்டஸ்’ தோல்வியடைய வேண்டி கெஜ்ரிவால் தலைமையில் காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை செய்தனர்.
டெல்லியில் இன்று கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் அவசரமாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் பேசிய ஆம் ஆத்மி தலைவர் சவுரவ் பரத்வாஜ், “மொத்தமுள்ள 62 எம்எல்ஏக்களில் 50 பேர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் கெஜ்ரிவாலிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். தங்கள் உயிர்மூச்சு உள்ளவரை ஆம் ஆத்மிக்கு உண்மையாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர்” என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கெஜ்ரிவால் எங்கள் எம்எல்ஏக்கள் 40 பேரை விலைக்கு வாங்க பாஜகவினர் முயற்சித்தனர். ₹20 கோடி பேரம் பேசப்பட்டது. இந்நிலையில் ஒரு எம்எல்ஏவை கூட அவர்களால் விலைக்கு வாங்கமுடியவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.
டெல்லி சட்டப்பேரவை தொகுதியில் 70 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது ஆம் ஆத்மிக்கு 62 எல்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 8 பேர் உள்ளனர். இதனால் 40 எம்எல்ஏக்களை பிரிக்க பாஜக திட்டமிடுகிறது. இதை தடுக்கும் வகையில் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் (40 எம்எல்ஏக்களை பிரிக்கும் திட்டம்) தோல்வியடைய வேண்டும் என்ற நோக்குடன் கெஜ்ரிவால் தலைமையில் இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை செய்தனர்