தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 46 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு (2022) நல்லாசிரியர் விருதுக்கு 46 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன்,புதுச்சேரி முதலியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்குவார். விருதுடன் பாராட்டு சான்றும், ரொக்கத்தொகை ₹50,000, வெள்ளி பதக்கம் ஒன்றும் வழங்கப்படும்.