அசாமில் 90 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் 181 வாக்குகள் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி 2 ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 39 தொகுதிகள் கொண்ட அசாமில் 26 பெண்கள் உள்பட 345 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தநிலையில், திமா ஹசாவ் மாவட்டத்தில் ஹப்லாங் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் 181 வாக்குகள் பதிவாகி இருந்தது.
Read more – வாக்களிக்க மிதிவண்டியில் வந்த நடிகர் விஜய்… வைரலாகும் புகைப்படங்கள்…
ஆனால், அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களே உள்ள நிலையில் 181 வாக்குகள் பதிவாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, 6 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறுதேர்தல் நடத்த தேர்தல் நடத்த திட்டமிட்டு அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.