இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி.
டெல்லி, இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 22,431 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,602 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மொத்தமாக இதுவரை 3,32,00,258 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 2,44,198 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 204 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த எண்ணிக்கை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 92.63 கோடி தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.