இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு 1,092 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பரவலின் வேகம் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,092 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, கொரோனாவால் இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 52, 889 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில், ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழப்பது இது மூன்றாவது முறையாகும்.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும், 8,01,518 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், புதியதாக 64, 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27, 67,274 ஆக அதிகரித்துள்ளது. இதில், சிகிச்சைக்கு பிறகு, 20,37,871 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் 6,76,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால், இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 30,17,42,782 அதிதிகரித்துள்ளது.