லடாக்கில் எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியா- சீனாவுக்கு இடையே சமீப காலமாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே வருகிறது . அண்மையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதில் இருந்தே அங்கு பதற்றம் அதிகரித்து இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றனர்.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.இந்த நிலையில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை மீறி துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய- சீனா எல்லை பகுதியில் இந்திய தரப்பில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.மேலும் சீனா ராணுவம் தான் வானில் துப்பாக்கி சூடு நடத்தியது என தெரிவித்துள்ளது.