Wednesday, November 19, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மகாராஷ்டிராவில் அரசு பேருந்து 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து!

December 10, 2022

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்எஸ்ஆர்டிசி) பேருந்து ஏழு வாகனங்களை மோதியதில் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர் . இந்த சம்பவம் நாசிக் பகுதியில் பெரும் பரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

புனே மாவட்டத்தில் உள்ள ராஜ்குருநகரில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து நாசிக் நோக்கி சென்றுகொண்டிருந்தது. காலை 11.45 மணியளவில் பால்ஸ் கிராமத்திற்கு அருகே வந்தபோது, திடீரென பேருந்தின் பிரேக் பழுதாகி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சின்னாரில் இருந்து வந்த மற்றொரு அரசு பேருந்து மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு சிறிய ரக கார் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இரண்டு பேருந்துகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர். அதோடு மோதிய வேகத்தில் அவர்களின் பைக்குகள் தீப்பிடித்ததால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

பைக்குள் இருந்து ராஜ்குருநகரில் இருந்து வந்த பேருந்துக்கு தீ பரவியது. தீப்பற்றி எரிந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த அப்பகுதி மக்கள் 43 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். நாசிக் சாலை தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களும், ஷிங்காடா தலாவ் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு மீட்பு வேனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

தீப்பிடித்த பேருந்தில் இருந்த சில பயணிகள் லேசான காயங்களுடன் நாசிக் மாநகராட்சியின் பைட்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த இருவரின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்கிடையில், விபத்து குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மாநில கட்டுப்பாட்டில் உள்ள எம்எஸ்ஆர்டிசி நியமித்தது. குழு ஓரிரு நாட்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் குறித்து நடத்துனர்கள், ஓட்டுநர்கள், பேருந்து பயணிகள், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் பிறரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேக் செயலிழந்ததால் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி செயல்படவில்லை.

எனவே விபத்து நடந்த போது அதன் சரியான வேகத்தைக் கண்டறிய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரம், பஸ் பைக்குகள் மீது மோதியதில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டிருக்கலாம். உராய்வில் இருந்து தீப்பொறி பற்றியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

CCTV footage of ST bus accident at Palase on Nashik-Pune highway#Accident #CCTV #Nashik_pune_Highway#Nashik #Sinnar #Palse pic.twitter.com/9BaKJ0JMUo

— पाटील 🤗 (@PareshPatil11) December 8, 2022

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மாண்டஸ் புயல் எதிரொலி: 300 மரங்கள் சாய்ந்தன; 4 பேர் பலி

Next Post

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு!

Next Post

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

October 8, 2025

12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

October 6, 2025

தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

October 4, 2025

விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை – உயர்நீதிமன்றம் காட்டம்

October 3, 2025

ஸ்டாலின் தன்னைப் பார்த்தே கேள்விகள் கேட்க வேண்டும் – இபிஎஸ்

October 3, 2025

தமிழ்நாடு அரசின் கணக்காயர் தான் முடிவெடுக்க வேண்டும்

September 2, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version