பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் பொழுது பட்டாசு வெடிப்பது காரணமாக கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுகிறது என கூறி அதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பண்டிகை தினங்களில் பட்டாசுகளை வெடிக்க கால நேரம் ஆனது உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டது.
இதற்கிடையில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் பட்டாசு வெடிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும்,
காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என பட்டாசு வெடிக்கும் நேரத்தை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளைத் தயாரிக்க தயாராக இருக்கிறோம் அதற்கு அனுமதி வேண்டும் எனவும் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்க கூடிய நேரத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த முக்கிய கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.