வேளாண் சட்டங்கள் குறித்து இன்று சாதகமான தீர்வு எட்டப்படும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:
மத்திய அரசு விவசாயிகளின் போராட்டதை முடிவு கொண்டுவர கடந்த 30 ம் தேதி விவசாய அமைப்பினருடன் 6 ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் சார்பில் மத்திய அரசுக்கு 4 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனர். அதில் 2 அம்ச கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Read more – தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அந்த 2 அம்சங்கள் பின்வருமாறு;
சுற்றுச்சூழல் தொடர்பான அவசர சட்டம் – விவசாயிகள் வைக்கோல்களை எரிப்பதற்காக அபராதம் இல்லை.
மானிய மின்சார கட்டணம் – நீர்ப்பாசனத்துக்காக விவசாயிகளுக்கு மாநிலங்கள் வழங்கி வருகிற மானியம் தொடரும்
மேலும், குறைந்த பட்ச ஆதரவில்லை மற்றும் 3 வேளாண் மசோதாக்கள் தொடர்பான அம்சங்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு 7 ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (ஜனவரி. 4 ) மீண்டும் நடத்த இருக்கிறது.
இதையடுத்து, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வேளாண் சட்டங்கள் குறித்து இன்று சாதகமான தீர்வு எட்டப்படும் என்றும், அனைத்து விஷயங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிப்போம் என்று தெரிவித்தார்.



