Friday, September 29, 2023
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

அத்தி பூத்தாற்போல் – பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

September 14, 2022
செய்தி அலை சிறுகதைப் போட்டி – 42 அத்தி பூத்தாற்போல் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

மாவட்ட ஆட்சியர் கணபதிமுருகன் வழக்கம்போல் விநாயகர் படத்தின் முன்பாக நின்று வணங்கி விட்டு, இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக்கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்போது “அய்யா! வணக்கம்.  என்னோட  பெயர் சத்தியமூர்த்தி அய்யா“ என்று  தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். “அய்யாவை நான் நேரில் பார்த்து பேசணுமுன்னு ஐயா சொன்னீங்களாம். அதான் அய்யாவைப் பார்க்க வந்தேன் அய்யா”  என்ற சத்தியமூர்த்தியின் பணிவான அய்யா குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் கோப்பினை பார்ப்பதை விட்டு எதிரே நிற்பவரை  நிமிர்ந்து பார்த்தார்.

     தும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, இடுப்பில் இறுக்கி கட்டிய வெண்மையான சிறுதுண்டு, வெண்மையான அடர்ந்த தாடி மீசை, இடுங்கிய ஒளி பொருந்திய கண்கள், எழுபத்தைந்து வயதைக் காட்டும் நெற்றிச் சுருக்கங்களுடன் அவர் காணப்பட்டார். மாவட்ட ஆட்சியர் பணிவாக நிற்கும் சத்தியமூர்த்தியை  பார்த்துக்கொண்டே, அவரைப் பற்றி நேற்று காலையில் அலுவலகத்தில் நடத்திய மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், பிள்ளையார்குளம் கிராம மக்கள் தன்னிடம் சத்தியமூர்த்தியைப் பற்றி கூறியதை  நினைவு கூர்ந்தார்.

சர்வதேச கலையுலகில் புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன்- மலேசியா பிரதமர்

அயலான் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறதா?

வாடிவாசல் படத்தின் முதல்கட்டப் பணிகள் தொடங்கின

     சத்தியமூர்த்தி பிள்ளையார்குளம் கிராமத்தில் வசித்து வந்தார். நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு சிறை சென்றவர். உழைத்து வாழ வேண்டும் எனக் கொள்கையில் ஊறியவர்.  அவர் தனக்குச் சொந்தமான கூரை வீட்டில் குடியிருந்து வந்தார். அவர் முன்னோர்கள் வழியில் வந்த குறைந்த அளவில் உள்ள  நிலத்தில் பாடுபட்டு, வரக்கூடிய வருமானத்தில் வாழ்ந்து வந்தார். அவர் தனது வருமானத்தில் சேமித்து வைக்கும் பணத்தில், தன்னால் முடிந்த அளவு ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்து வந்தார். எப்படியும் வாழலாம் என்றில்லாமல், இப்படித்தான் வாழவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

     அவர் தனது மானசீகக் குருவாக மகாத்மாகாந்தியையும் ஆன்மீகக் குருவாக சுவாமி விவேகானந்தரையும் ஏற்றுக்கொண்டு, அவர்களது வழியில் நடந்து செயல்படுபவர். ‘ஏழைகளிடம், பலவீனர்களிடம், நோயாளிகளிடம் இறைவனை காண்பவனே அவரை உண்மையில் வழிபடுகிறான்’ என்பதை  விவேகானந்தரின் கனிவுமிக்க அமுதமொழிகளை மனதில் பசுமரத்தாணிபோல பதிந்து வைத்துகொண்டு,  சத்தியமூர்த்தி செயல்பட்டு வந்தார்.

    சத்தியமூர்த்தி என்ற தன்னோட  பெயருக்கேற்றபடி  நேர்மையுடன் எளிமையுடன் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் காலை ஆறு மணிக்கு கிராமத்தில் உள்ள ஏதோ ஒரு தெருவில் துப்புரவு செய்து கொண்டிருப்பார்.  அவர் துப்புரவு செய்வதைப் பார்த்து, கிராமத்தில் உள்ள சில விடலைப் பசங்கள்  ஆரம்பத்தில் “ஏய் பெருசு உனக்கு வேலை வெட்டி இல்லே, தெருவை தோட்டிபோல் பெருக்கிக்கிட்டு இருக்கே” என ஏளனமாக பேசுவதைக் கேட்டு, கோபப்படாமல் அவர்களுக்கெல்லாம் அவரது ஒரு புன்னகைதான் பதிலாக இருக்கும்.  யார் ஏளனமாக கோபமாகப் பேசினாலும்,  அவரது துப்பரவுப்பணி மட்டும் கிராமத்தில் தினமும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. நாளடைவில் அவரை ஏளனமாகப் பார்த்தவர்கள், பேசியவர்கள் எல்லாம், தானாக முன்வந்து, அவருடன் சேர்ந்துகொண்டு கிராமத்து மக்கள், மகிழ்வுடன் சுத்தம் செய்யத்  தொடங்கினார்கள்

       சத்தியமூர்த்தியின் செயல்களை உற்று நோக்கினால், சிந்தித்துப் பார்த்தால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் ‘ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்துதான் ஆகவேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதைப்போல் இருக்கும். ஏளனம், எதிர்ப்பு, ஏற்றுக்கொள்ளல்’ போன்ற  நிலைபாடுகள்தான் சத்தியமூர்த்தியிடம் இயல்பாக இருந்தது.

     ஒருமுறை அக்கிராமத்தில் வாறுகால் வசதியில்லாமல், கழிவுநீர் ஓடி, தெருவே சுகாதாரக்கேடாக இருப்பதைக்கண்டு, சத்தியமூர்த்தி மனம் வருந்தினார். அக்கிராமத்தில் வசிக்கும் நாட்டாமை என்று சொல்லிக்கொள்ளும், பண்ணையாரிடம் சென்று, தெருவில் வாருகால் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யும்படி, அவர் கிராம மக்களுடன் சேர்ந்து அன்புடன் கேட்டார். பண்ணையார் அவர் கூறியதையெல்லாம்  செவிமடுத்ததாக தெரியவில்லை.  பொறுத்தது போதும் என்று மனதில் நினைத்துக்கொண்டு, ஒருநாள் சத்தியமூர்த்தி தன்னுடன் கிராமத்தில் துப்புரவுப்பணியில் ஈடுபட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு மண்வெட்டி, கடப்பாரையுடன் தெருவில் வாருகால் தோண்டுவதற்கு ஆரம்பித்து விட்டார்.

அதைப் பார்த்துக்கொண்டு இருந்த அத்தெருமக்களும் ஆளுக்கொரு கடப்பாரையுடன் வாருகால் தோண்டுவதற்கு சத்தியமூர்த்தி அழைக்காமலே  வந்து விட்டார்கள். இதைப் பார்த்த பண்ணையார் பொறுக்கமாட்டாமல், சத்தியமூர்த்தியை பலவிதமாக ஏளனமாகத் திட்டிப் பார்த்தார். சத்தியமூர்த்தி எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் வழக்கம்போல் அவருடைய புன்னகைதான் பண்ணையாருக்கும் பதிலாக இருந்தது. அவரின் நியாயமான கோரிக்கை, பொறுமை அவருடைய அணுகுமுறை எல்லாம் பண்ணையாரின் மனதையே நாளடைவில் மாற்றி விட்டது. பண்ணையார் அவருடன் சேர்ந்துகொண்டு, வாருகால் அமைப்பதற்கு  முன்னின்று வேண்டிய உதவிகளையும் செய்தார்.

     சத்தியமூர்த்தி குடிசையில் ஒரு மினி நூலகம் வைத்து  நடத்தி வந்தார். அதில் பாரதியார் கவிதைகள், விவேகானந்தர் வீரமுரசு, இராமகிருஷ்ணர் அமுதமொழிகள், காந்திஜியின் சத்தியசோதனை, தேவாரம், திருவாசகம் திருக்குறள் போன்ற பயனுள்ள நூல்களை வைத்திருந்தார். அக்கிராமத்தில் ஆலமரத்தினடியின்கீழ் ஆடுபுலி ஆட்டம்,  தாயக்கட்டம்,  சீட்டுக்கட்டு போன்ற வெட்டியாக விளையாடிய அக்கிராம மக்களை, பயனுள்ள வகையில் நூலகம் வந்து பயன்பெறுமாறு செய்தார். வீட்டில் உள்ள பெண்களிடம் யாராவது “உங்கள் அப்பா எங்கே, மாமா, தாத்தா, எங்கே?” என்று கேட்டால் சத்தியமூர்த்தியின் குடிசையில் சென்று பாருங்கள். நம்பிக்கையுடன் பேசும்படி அக்கிராமமக்களை மாற்றியிருந்தது. இதற்கெல்லாம் காரணம் சத்தியமூர்த்தியின் பொறுமை, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை இனிமையான பேச்சு போன்ற அணுகுமுறைகள்தான்.

     மாவட்ட ஆட்சியரின் டபேதார் “ அய்யா, கோட்டாட்சியர் அய்யாவைப்  பார்க்க வந்திருக்கிறார்“ எனக்குரல் கொடுத்தவுடன்தான், மாவட்ட ஆட்சியர் சத்தியமூர்த்தியின்  நினைவலைகளிலிருந்து மீண்டு வந்தார்.  “சரி அவரை வரச் சொல்” என்று கூறிவிட்டு, எதிரே நிற்கும் சத்தியமூர்த்தியைப் பார்த்து “ பெரியவரே ! திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டத்தில், பொதுவாக மக்கள் தங்கள் குறைகளைக் கூறித்தான் என்னிடம் மனுக் கொடுப்பார்கள். ஆனால் போன வாரம் பிள்ளையார்குளம் கிராம மக்கள் வித்தியாசமான மனு ஒன்றை என்னிடம்  கொடுத்திருகாங்க. அதில்….” என்று மாவட்ட ஆட்சியர் கூறிக்கொண்டு இருக்கும்போது,… கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அறையில் அனுமதியுடன் நுழைந்தார்.

 அவரை இருக்கையில் அமரும்படி சைகையில் கூறிவிட்டு, “பெரியவரே உங்களுக்கு அரசு வழங்கும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பென்சன் உங்களுக்கு கிடைக்கும்படி ஏற்பாடு செய்யும்படி என்னிடம் கிராமமக்களே மனுக்கொடுத்து இருக்கிறார்கள்.  நீங்க ஏன் தியாகிகள் பென்சன் வேண்டாம்ன்னு கூறீர்ங்க? நீங்க உண்மையான சுதந்திரப்போராட்டத்தியாகின்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க கிராம மக்களுக்கும் நல்லதெல்லாம், ஆர்வமுடன்  செய்கிறீங்க. பெரியவரே நீங்க சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பென்சன் கோரி, மனுக் கொடுக்க உங்களுக்கு என்ன சிரமம்.? என்ன தயக்கம்? சொல்லுங்க பெரியவரே!“ எனக்  கேட்டார் மாவட்ட ஆட்சியர்.

     சத்தியமூர்த்தி “அய்யா! மன்னிக்கணும் நான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்டது,  நானே விருப்பப்பட்டுக் கலந்துகிட்டது.  எனக்கு அதிலே ஒரு ஆத்ம திருப்தியும் மகிழ்ச்சியும் இருந்தது ஐயா. இதற்கு ஏன் சர்க்கார் எனக்குப் பென்சனெல்லாம் கொடுக்கணும்னுதான் கேக்கறேன்“ என்றார்.

      அந்தப் பெரியவர் பாமரன் என்னமோ நன்கு சிந்தித்து அறிவுபூர்வமாகப் தன்னிடம் பேசுவதுபோல்தான் மாவட்ட ஆட்சியருக்குத் தோன்றியது. ‘நான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்டது,  நானே அதில் விரும்பிக் கலந்துகிட்டது.  எனக்கு அதிலே ஒரு ஆத்ம திருப்தி இருந்தது. இதற்கு ஏன் சர்க்கார் தியாகி பென்சன் கொடுக்கணும்னு கேக்கறேன்’ என்று சத்தியமூர்த்தியின் தன்னலமற்ற வார்த்தைகள் மாவட்ட ஆட்சியரையே சிந்திக்க வைத்தது.

     கோட்டாட்சியர் குறுக்கிட்டு “பெரியவரே! அரசாங்கம் உங்களைப் போன்ற தியாகிகளுக்கு  சர்க்கார் கொடுக்கும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பென்சன் வாங்கித் தர வேண்டும் என்று உங்களோட கிராம மக்களும், என் நமது மாவட்ட ஆட்சியரும் விரும்புறாங்க. நீங்கள் ஒரு மனு மட்டும் எழுதிக்  கொடுங்கள். உங்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் கிடைப்பதற்கு  நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம்” என விளக்கினார்.

       “ அய்யா! நான் சுதந்திர போராட்டத்தில் நானே விரும்பிக் கலந்துகிட்டது சர்க்கார்  ஏன் எனக்கு இந்த பென்சன் தர வேண்டும் என்றுதான் கேட்கிறேன் அய்யா. நான் நாட்டிற்காக போராடியது எனது கடமையாய் நெனைக்கிறேன். எனது கடமைக்கு தியாகி பென்சனா? உதவியா? அய்யா  நீங்க சொன்னதுபோல் நான் பென்சன் வாங்கினால், நான் சுதந்திரத்துக்குப்  பாடுபட்டதற்கே  அர்த்தமேயில்லையே அய்யா“ என கூறியதையே மீண்டும் மீண்டும் கூறி, தன்னை  உண்மையான தன்னலமற்ற  தியாகி என்பதை தனது வார்த்தைகளால் நிரூப்பித்துக் கொண்டிருந்தார்.

      கோட்டாட்சியர் ஏதோ கூறுவதற்கு முற்படும்போது, சத்தியமூர்த்தி இடைமறித்து “ அய்யா, எனக்கு உழைக்க உடலில இன்னும் தெம்பு இருக்கு. உதவி செய்ய இந்தக் கிராம மக்கள் இருக்காங்க. என் எதிர்காலத்தைப் பற்றி எந்தவிதக் கவலையும் எனக்கு இல்ல ஐயா. நான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்டதற்கு  எனக்கு பென்சனா? நெனைக்கவே எனக்கு சிரிப்புதான் வருது அய்யா.  தியாகத்துக்கு விலை பென்சனா? வேண்டாம் அய்யா, பென்சன் கொடுத்து என்னைப் போன்றவங்களை கொச்சைப்படுத்தாதீங்க.  ஐயா! மன்னிக்கவும். என்னைக்  கூப்பிட்டுப் பேசியதுக்கு நன்றிங்க ஐயா“ என்று கூறி வணங்கிச் சென்றார்.

       கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரை நோக்கி “ சார்! இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட நேர்மையான உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் இருக்கிறார்களே, அரசாங்கம் வழங்கும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பென்சன் வேண்டவே வேண்டாம் என்று கூறும் வித்தியாசமான மனிதரை இப்போதுதான் பார்க்கிறேன். பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா கூறியதுபோல் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இந்த வித்தியாசமான மனிதரை பார்க்கும்போது…”.மேலும் கோட்டாட்சியர் ஏதோ கூற முற்பட்டார்.

        மாவட்ட ஆட்சியர் குறுக்கிட்டு “இந்த வித்தியாசமான மனிதர் நம்மிடம் பேசியது, நடந்துகிட்ட முறையெல்லாம்  பார்க்கும்போது ‘தியாகத்துக்கு கூலியா’ என்று நம்மிடம் கேட்காமல்  கேள்வி கேட்டு விட்டு செல்வதுபோல்தான், உணர்த்தி விட்டுதான் அவர் சென்றிருக்கிறார். தற்போதுள்ள நம் நாட்டு அரசியல்வாதிகள் இதனை உணரவேண்டும். தியாகி  சத்தியமூர்த்தியைப்போல் உயர்ந்த எண்ணமுடையவர்கள் அத்தி பூத்தாற்போல் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் இதனை நன்கு உணர்ந்து கொண்டேன்.  நீங்கள்….”..என ஏதோ மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியரை நோக்கிக் கூற முற்படும்போது, அவர் மேசையில் அமைதியாக இருந்த தொலைபேசியானது மாவட்டஆட்சியர் கூறியதை ஆமோதிப்பதுபோல் ‘டிரிங் டிரிங் டிரிங்’ என ஒலித்தது

                                                                                    ** ** ** ** ** **

Share this:

  • Twitter
  • Facebook
Previous Post

கோடாக் QLED ஸ்மார்ட் டிவி அறிமுகம்

Next Post

சிவன் ஆத்மாக்களின் தந்தை- சுதர்சன்

Next Post

சிவன் ஆத்மாக்களின் தந்தை- சுதர்சன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சர்வதேச கலையுலகில் புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன்- மலேசியா பிரதமர்

September 11, 2023

அயலான் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறதா?

September 6, 2023

வாடிவாசல் படத்தின் முதல்கட்டப் பணிகள் தொடங்கின

September 6, 2023

நெல்சன் ரொம்ப நன்றிப்பா…. வர்மன் கதாபாத்திரம் குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி

September 6, 2023

“ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது”

September 6, 2023

நடிகை திவ்யா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி

September 6, 2023
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version