கஞ்சா விற்பனை 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூடுவாஞ்சேரி அடுத்த பகுதியில் சிலர் மறைத்து வைத்து கஞ்சா விற்பதாக கூடிவாஞ்சேரியை சேர்ந்த போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் போலீசார் தகவல் வந்த இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அங்கு திடுதிப்பென போலீசார் சென்றதும் அதை பார்த்த இளைஞர்கள் பதட்டத்திற்கு உள்ளாகி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர்.
அதனை கவனித்த போலீசார் தப்பி ஓட முயன்ற மூன்று வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் துறைக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் மாடம்பாக்கத்தை சேர்ந்த ரூபன், ரியாசுதீன், பிரவீன்குமார் ஆகிய மூவரும் அதே பகுதியில் கஞ்சா விற்றுவந்தது தெரிந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர் செய்து சேர்கையில் அடைத்தனர். மேலும் போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.