சென்னை ஓட்டேரியில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூதால் தர்மரே நாட்டை துளைத்தபோதிலும், மஹாபாரதம் போன்ற மிகப்பெரிய போர்கள் நடந்து பல உயிர்கள் போனபோதிலும், சூதும் சூதாடும் கூட்டமும் இன்றுவரை குறையவில்லை. எத்தனையோ குடும்பங்கள் இந்த சூதாட்டத்தால் நிலைகுலைந்துள்ளது. ஆலமரத்தின் அடியில் சூதாடிய கூட்டம் இன்று பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது ஆன்லைனில் சூதாடுகின்றனர்.
இந்நிலையில் ஜாமாலியா ஹதர்கார்டன் என்ற இடத்தில் ஆறு பேர் சீட்டு விளையாடி உள்ளனர். சாதாரணமாக விளையாடி இருந்தால் பரவாயில்லை இவர்களோ பணம் கட்டி சீட்டு விளையாடி உள்ளனர். இந்த செய்தி அந்த பகுதியை உள்ள காவல் துறையினர் காதில் விழவே அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு சென்றதும் ஜாமாலியா ஹதர்கார்டானில் சீட்டு விளையாடி கொண்டு இருந்தும் ஆறு பெரும் அகப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆறுபேரிடம் இருந்து ரூ. 22,000 பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.