வேல் யாத்திரையில் அத்துமீறல் பாஜ பிரமுகர் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து கடந்த 8ம் தேதி காலை 10.30 மணிக்கு வேல் யாத்திரையானது தொடங்கும் என பாஜக கட்சியினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக மாநில தலைவரான எல். முருகன் பங்கேற்றார். அவர் கோயம்பேடு பகுதியில் உள்ள தன் இல்லத்தில் இருந்து தன் கட்சி நிர்வாகிகளுடன் திருவெற்றியூர் புறப்பட்டார்.
அப்போது ராயபுரம் வழியாக சென்னை மாவட்ட பாஜ தலைவர் விஜய் ஆனந்த்தும் அங்கு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுக்க முற்பட்டுள்ளார். அப்போது அவர் அந்த போலீசாரை இடிப்பது போல தன் காரினை ஓட்டியுள்ளார். இதுகுறித்து, பாதுகாப்பு பணியில் இருந்த முதல்நிலை காவலர் மணிகண்டன் ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் பாஜக மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் மீது பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் மீது மோதுவது போல கார் ஓட்டியது, பின்னர் அதிக சத்தம் வரும்படி கார் ஓட்டியது, சாலை ஓரத்தில் கோடி கட்டியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.