கெஜ்ரிவால் அரசு ஊழல் செய்து இருந்தால் அதற்கு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பா.ஜ.க. இடம் அன்னா ஹாசரே கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி ஆளும் அரசுக்கு எதிராக போராட நீங்கள் வரவேண்டும் என்று அன்னா ஹசாரேவுக்கு டெல்லி பா.ஜ.க. தலைவர்ஆனா ஆதேஷ் குப்தா கடிதம் எழுதி அழைப்பு விடுத்து இருந்தார். அதற்கு அதிரடியாக பதில் கூறியிருந்த அண்ணா ஹசாரே ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக என்னை அழைத்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது அந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவரின் கடிதத்தை படித்ததிலிருந்து எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கட்சி ஒரு மக்கள் போராட்டத்திற்காக 83 வயதான என்னை சார்ந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா அரசு தங்களுக்கு கீழே அமலாக்கத்துறை சிபிஐ துறை அனைத்தையும் கொண்டுள்ளது டெல்லி அரசு ஊழல் செய்து இருந்தது நிரூபிக்கப்பட்டால் அதன் மீது கடுமையான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை .
பிரதமர் எப்பொழுதும்அவருடைய உரையில் ஊழலை ஒழிப்பதற்கான கடுமையான நடவடிக்கையை நம் அரசு எடுத்துள்ளது என்றெல்லாம் கூறுகிறார் பின்பு ஏன் உங்கள் அரசு டெல்லி அரசு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் ஊழலை அழிப்பதாக நீங்கள் சொல்வது எல்லாமே பயனற்ற தகவல் தானா? தற்போது அனைத்து கட்சிகளுமே தூய ஆய்வுகளை மேற்கொண்டு தங்களின் குறைபாடுகளை ஒப்புக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளது என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.