கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் கூலியை பேனர்கள் மூலம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கட்டுமான பணியாளர்கள் சிவகங்கை பூங்கா, வெள்ளைப் பிள்ளையார் கோவில், கொடிமரத்து மூலை ஆகிய பகுதிகளில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து பிரிந்து தங்களுடைய வேலைக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில் அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான கட்டுமானப் தொழிலாளர்களின் கூலி இவ்வளவு என அப்பகுதிகளில் பேனர் கட்டி வைத்துள்ளனர்.
இந்த பேனரில் கட்டுமான தொழிலாளர்களின் 2021 ஆம் ஆண்டிற்கான 8 மணி நேர வேலைக்கான சம்பள விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கொத்தனார் கூலி ரூபாய் 800, ஆள் கூலி ரூபாய் 600, சித்தாள் கூலி ரூபாய் 400, கான்கிரீட் கொத்தனார் கூலி ரூபாய் 850, காங்கிரீட் ஆள் கூலி ரூபாய் 650, கான்கிரீட் சித்தாள் ரூபாய் 450 என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் கூலியை அறிவித்து பேனர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.