தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை என்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறி உள்ளார்.
சென்னையில் சில மணிநேரம் கனமழை பெய்தாலே ரோடுகள் நிரம்பி தண்ணீர் முழங்கால் வரையில் தேங்கி நிற்கும். இன்னும் சில நேரங்களில் படகுகளில் போகும் அவலநிலை கூட ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னையில் உள்ள பலபேர் சென்னையின் ரோடு சிஸ்டம் சரியில்லை என கூறினார்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் என்ன நேருமோ என சென்னை வாசிகள் அனைவரும் பயப்படுகின்றனர். தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை. தற்போது மக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை; நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. பருவமழை தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 200 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள், 600 மோட்டார் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் தயங்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.