இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் விவரிக்க முடியாத சில உணர்வுபூர்வமான செயல்பாட்டு சிக்கல்கள் இருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்திய சீனா பிரச்சனைகள் இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. இன்னும் சீனா இந்திய எல்லைக்குள் ஊடுறுவ முயற்சித்து வருகின்றது.
இந்நிலையில் ஜூன் 15ம் தேதி, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கும் முயற்சியில், கல்வான் பள்ளத்தாக்கில் கர்னல் சந்தோஷ் பாபு தனது 19 துணிச்சலான வீரர்களுடன் உயர்ந்த தியாகத்தை செய்தார். அதன் பின்னர் ராணுவ வீரர்களை மேலும் தயார்படுத்துவதற்காக பிரதமர் லடாக் சென்றார்.
இந்தியா எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. லடாக் பிராந்தியத்தில் உள்ள சுமார் 38000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.அருணாச்சல பிரதேச எல்லையின் கிழக்கு செக்டாரில் 90000 சதுர கிலோ மீட்டர் இந்திய பகுதியை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.
இது குறித்து பாதுகாப்பு துறை மந்திரி பேசுகையில் இந்தியாவும் சீனாவும் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம். எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், என்னால் விவரிக்க முடியாத சில உணர்வுபூர்வமான செயல்பாட்டு சிக்கல்கள் உள்ளன. இதனை இந்த அவை புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.