ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கு வந்த பூனைக்குட்டியை ஒரு வாரமாக வளர்த்த குடும்பம். அந்த பூனைக்குட்டியின் செயலில் மாற்றம் இருக்கவே இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் இது பூனைக்குட்டியல்ல புலிக்குட்டி என தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் துறைமுக நகரமான லு ஹவ்ரே, நார்மண்டி பகுதியை சேர்ந்த தம்பதி உலகப் புகழ் பெற்ற சவானா வகை பூனைக் குட்டியை வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். பூனைக்குட்டி வகைகளில் சவானா வகை பூனை மிகவும் பிரபள்ளமானது. இது புலி குட்டியை போன்றே இருக்கும் பூனைக்குட்டியாகும். தம்பதிகள் விருப்பப்பட்டுள்ளனர்.
இதற்கு சுமார் 6000 யூரோக்களை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பூனைக்குட்டியை ஆசை ஆசையாக தம்பதிகள் வளர்க்கத் தொடங்கினர். ஒரு வாரத்தில் பூனைக்குட்டியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. இது அந்த தம்பதிகளை சந்தேகமடையச் செய்துள்ளது.
இதையடுத்து பூனைக்குட்டி குறித்து காவல்துறையினருக்கு தகவலளிக்கவே காவல்துறையினர் விலங்கியல் நிபுணர்களை அழைத்து வந்த சோதனை மேற்கொண்டனர். இதில் இது பூனைக்குட்டி அல்ல சுமத்ரன் வகை புலிக்குட்டி என்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து தம்பதியினரிடம் தெரிவிக்கே அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தம்பதிகளிடம் இருந்த புலிக்குட்டி மீட்கப்பட்டு வன உயிரியல் காப்பதுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.