சிஎஸ்கே வீரர்களுக்கு நாளை மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யப்பட்டு செப்டம்பர் 4ம் தேதி முதல் பயிற்சி தொடங்கும் என சிஎஸ்கே சி இ ஓ கே.எஸ்.விசுவநாதன் அறிவித்துள்ளார்.
துபாய்:
சிஎஸ்கே வீரர்கள் தீபக் சாகர் மற்றும் ருதுராஜ் உள்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது,இதனை தொடர்ந்து அவர்களை 14 நாட்கள் தனிமை படுத்தினர்.இந்தநிலையில் அவர்களை தவிர மற்ற வீரர்களுக்கு நாளை மறுதினம் முதல் பயிற்சி துவங்கவுள்ளதாக சிஎஸ்கே சி இ ஓ கே.எஸ்.விசுவநாதன் அறிவித்துள்ளார்.நேற்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைத்து வீரர்களுக்கும் நெகட்டிவ் என வந்தது.நாளை ஒரு நாள் மீண்டும் அவர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களால் அணியிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.இந்த நிலையில் சிஎஸ்கே வீரர்கள் தீபக் சாகர் மற்றும் ருதுராஜ் உள்ளிட்ட 13 பேர் தொடர்ந்து 14 நாட்கள் தனிமையில் இருப்பது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.இதனை தொடர்ந்து 14 நாட்கள் தனிமைக்கு பிறகு எடுக்கப்படவுள்ள இரண்டு பரிசோதனையில் நெகட்டிவ் வந்தபிறகே தீபக் சாகர் மற்றும் ருதுராஜ் பயிற்சி மற்றும் போட்டிகளில் ஈடுபடுவார்கள் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.