அஜய் மிஸ்ரா ஆஜர்!! உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து.
டெல்லி, உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த வாரம் விவசாயிகளின் பேரணியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட வன்முறையில் ஒரு உள்ளூர் பத்திரிக்கையாளர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளரின் குடும்பத்தினரை அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோல், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்து லக்கிம்பூர் சென்ற போது சஹரன் பூரில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், உயிரிழந்த பத்திரிக்கையாளரின் வீட்டிற்கு சென்ற போது , உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் அஜய் மிஸ்ரா கைது செய்யப்படும் வரை உண்ணவிரதம் இருக்க போவதாக அறிவித்தார்.
அதன் படி நேற்று தொடங்கிய உண்ணவிரத போராட்டம் இன்று காலை வரை நீடித்த நிலையில் , இன்று அஜய் மிஸ்ரா குற்றபிரிவில் ஆஜரானதை தொடர்ந்து தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.