மீட்பு விமானத்தில் தங்கம் கடத்தியவர்கள் கைது…
துபாயிலிருந்து நேற்று கிளம்பிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அதில் தங்கம் கடத்துவதாக தகவல் வந்துள்ளது. அதன்பேரில் நடந்த சோதனையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருக்கைக்கு கீழே பார்சல் இருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து பார்சலை எடுத்து பார்த்தபோது 1.3 கிலோ தங்கம் இருந்தது.
அதன் சர்வதேச மதிப்பு 67.25 லட்சம் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து துபாயிலிருந்து வந்த மற்றொரு மீட்பு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டபோது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சென்னையை சேர்ந்த 6 பயணிகளிடம் உள்ளாடையில் தங்க கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட்களை கைப்பற்றினர்.
அதன் மொத்த எடை 2.7 கிலோ தங்கம் என்றும் அதன் சர்வதேச மதிப்பு .39 கோடி. அதில் சம்மந்தப்பட்ட 6 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.