ஆன்லைன் மூலமாக ஈசியா கண்டுபிடிக்கலாம்.
வீடுகளில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் முழு விலையையும் கொடுத்து வாடிக்கையாளர்கள் முதலில் சிலிண்டரை வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். சிலிண்டர் மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்துவதால் கள்ளச் சந்தையில் அரசின் மானிய விலை கேஸ் சிலிண்டர் விற்கப்படுவது பெருமளவு குறைந்துவிட்டது. அதேபோல, போலியாக வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவதும் குறைந்து விட்டது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் பெற முடியும் என்பதால் வீடுகளில் சமையல் எரிவாயுவை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துகின்றனர். முதன்முதலில் சிலிண்டர் வாங்கும்போது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால், அரசாங்க மானியம் பெற முடியாது.
இந்தியன் காஸ் பயன்படுத்துபவர்கள் மானியம் பற்றி எப்படி தெரிந்துகொள்வது: இந்தியன் ஆயில் இணையப்பக்கத்தில் ’Indane Cooking Gas’ என்பதை கிளிக் செய்யவும். உடனடியாக ஒரு டயலாக் பாக்ஸ் ஓப்பன் ஆகும். அதில் Subsidy status என்று பதிவிட வேண்டும். நீங்கள் இந்தியன் காஸ் வாடிக்கையாளர்களா என்று கேட்கப்படும்.ஆம் என்று அதற்கு கிளிக் செய்யவும். பின்னர் அதனில் வாடிக்கையாளர்கள் ஐ.டி. பதிவிட வேண்டும்.
பொதுவாக அணைத்து வாடிக்கையாளர்கள் எப்படி மானியம் பெற முடியும் என்று பாக்கலாம்: வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும். அதில் பார் மெனுவுக்கு சென்று ’Give your feedback online’என்பதைக் கிளிக் செய்யவும். உங்களுடைய மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் தகவல்களை நிரப்பவும். பின்னர் அதில் உங்கள் வாங்கி கணக்கை சேர்க்கவும்.