தனது மரண சாசனத்தின்படி எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கத்தின் உடல் மதுரை மருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சாதி மத சடங்குகள், குறியீடுகள் எதுவும் இருக்ககூடாது. உடல் கொண்டு செல்லப்படும் போது மேலதாளம் அடிக்க கூடாது. வாய்ப்பிருந்தால் தந்தை பெரியாரின் உரை ஒலிபரப்ப வேண்டும். உடல் மருத்துவக்கல்லூரிக்கு கொடையாக வழங்கப்பட வேண்டும்” என்று மரண சாசனம் எழுதியிருந்தார் தெ. சுந்தரமகாலிங்கம்.
தோழரது உடலினை அவரது புதல்வர்கள் கோபிநாத், கவுதமன் இன்று மதுரை மருத்துவக்கல்லூரியின் முதல்வரிடம் ஒப்படைத்தனர். இயக்கத்தோழர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினோம் என்று பதிவிட்டுள்ளார். தெ.சுந்தரமகாலிங்கம் ஆத்மா சாந்தியடையும் வகையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.