மதுரை காமராஜர் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கான இறுதியாண்டு இளநிலை, முதுநிலை பட்டபடிப்பு பருவத்தேர்வுகள் வருகிற 18-ந் தேதி முதல் ஆன்லைனில் நடக்கிறது. இதில் 48 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 18-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கடைசிப்பருவ தேர்வுகள் நடக்க உள்ளன.
தேர்வுக்கான வினாத்தாள் தேர்வு தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாக அந்தந்த கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துறைத்தலைவர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். கல்லூரி முதல்வர்கள் அந்தந்த துறைத்தலைவர்களுக்கு அனுப்பி வைப்பர். அவர்கள் மூலம் மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.
மாணவர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே எழுதலாம். புத்தகத்தை பார்த்து பரீட்சை எழுத கூடாது. அதற்கான விண்ணப்பத்தில் கையொப்பம் இடவேண்டும். இதுபோன்ற பல விதிமுறைகள் உள்ளன.