செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகளவில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது.
நிவர் புயல் காரணமாக தமிழகத்தை சுற்றியும் பல இடங்களில் பெரும் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. அதனால் பல மரங்கள் வேரோட சாய்ந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகளவில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. தொடர்ந்து காற்று வீசி கொண்டு இருப்பதால அதனை சரி செய்யும் வேலையும் தாமதமாகிறது.
இந்த மின் கம்பம் சாய்வினால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை தொடர்ந்து பெய்வதால் மின்சார ஊழியர்கள் தங்களின் வேலையை செய்யவும் இயலவில்லை என்று கூறுகின்றனர். சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் போன்ற பகுதிகளில் பெருமளவில் மரங்கள் சாய்ந்து வருகின்றது.
அந்த மரங்களை அப்புற படுத்தும் பணியிலும் செங்கல்பட்டு தீ அணைப்பு துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் மழையின் வேகமும், காற்றின் வேகமும் குறைந்தால் மட்டுமே மின் கம்பங்கள் சரிபார்க்கும் வேலைகள் தொடங்கப்படும் என மின்சார துறை தகவல் வெளியிட்டுள்ளது.