பிரேசில் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்! 26000 டாலர் வழங்கப்பட்டுள்ளது!
விண்வெளியிலிருந்து பூமிக்குள் விழும் விண்கற்களுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. சில நாடுகளில் விண்கற்களின் வகைக்கு ஏற்றார் போல பணம் வழங்கப்படுகிறது. அப்படி வடகிழக்கு பிரேசிலின் தொலைதூர நகரமான சாண்டா ஃபிலோமினாவில் வசிக்கும் விவசாயிக்கு கிடைத்த அரிய வகை விண்கற்களிற்கு சுமார் 26,000 டாலர் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை பல காலகட்டத்தில், நூற்றுக்கணக்கான விண்கற்கள் வானத்திலிருந்து பூமியில் மழை போல பொழிந்துள்ளது. சில நாடுகளில் விண்கற்களைத் தேடி எடுத்து விற்பனை செய்யும் வேலையை முழுநேர வேலையாகவே சிலர் செய்து வருகின்றனர்.
இந்த அரிய வகை விண்வெளி பாறைகளில் ஒரு பங்கை கண்டுபிடித்தால் கூட சாண்டா பிலோமினாவில் உள்ள உள்ளூர் மக்கள் பணக்காரர்களாகிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 40 கிலோவுக்கு மேல் எடையுள்ள இந்த பாறையின் கற்கள் கிடைத்துள்ளது.
இந்திய மதிப்பின்படி இந்த விண்கற்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகையானது 19,00,000 லட்சத்தைத் தாண்டுகிறது. இந்த நகரத்தில் வாழும் நகர மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதம் விவசாயிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய அறிக்கையின்படி, இந்த விண்வெளிப் பாறையின் துண்டுகள் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விண்கல்லின் ஒரு பகுதி மட்டும் தற்பொழுது விவசாயி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சூரிய மண்டலத்தின் தொடக்கத்திற்கு முந்தியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.