கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான NEET தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், JEE மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில் தேர்வெழுத வரும் மாணவர்களுக்க்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வு மையங்களில் முகக்கவசங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாணவர்களும், கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் உடல்வெப்ப சோதனைக்கு உட்படுத்த பட வேண்டும். மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தனிமனித சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உடல்வெப்ப நிலை 99.4 டிகிரிக்கு அதிகமாக இருந்தாலோ, கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ மாணவர்கள் தனி அறையில் தேர்வெழுத அனுமதிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் தங்களுக்கென பிரத்யேகமான குடிநீர் பாட்டில்களையும். சானிடைசரையும் கொண்டு வர வேண்டும் என்றும் அனுமதிச்சீட்டை மட்டுமே மாணவர்கள் எடுத்துச்செல்ல முடியும். 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்குள்ளும், இதர 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்கு வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும்,மாணவர்கள் கூட்டமாக செல்வதை தடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.