சென்னை அடையாற்றில், பிரம்மஞான சபையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வரை முதியவர் ஒருவர் பாராட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது உடல்நலத்தில்மிகுந்த அக்கறை உடையவர். இவர் பல அரசியல் தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றை தவறாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று சென்னை அடையாற்றில், பிரம்மஞான சபையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரிடம் பேசிய முதியவர் ஒருவர், கொரோனாவைரஸ் தடுப்புப்பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் தான் அச்சமின்றி வெளியே வர முடிகிறது என்றும், நிர்வாகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், லஞ்சத்தை ஒழித்து, இந்திய அளவில் தமிழ்நாடு நம்பர்.1 மாநிலமாக வரவேண்டும் என்று அவர் முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.