கொரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது இதன் காரணமாக பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தொடங்கிவிட்டன அதற்கான கல்வி-வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது அதை காண்போம்:
- KG வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது.
- 1 முதல் 8-ம் வகுப்பு வரை தினசரி இரண்டு வகுப்புகள்.
- 9 – 12 வரை தினசரி 4 வகுப்புகள்.
- படுக்கை அறைகளில் அமர்ந்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கக் கூடாது.
- மாணவர்கள் History-ஐ Delete செய்தால், பெற்றோர்கள் அவர்களுடன் மனம் விட்டு பேசி மாணவர்களை ஒழுங்கு படுத்த வேண்டும்
- WhatsApp Group-ஐ ஏற்படுத்தி அதில் பெற்றோர்களை இணைக்க வேண்டும்.
- WhatsApp குழுக்களில் தலைமை ஆசிரியர் இடம்பெற வேண்டும்.
- WhatsApp குழுக்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கான அட்டவணை, நேரம், பாடங்கள், தேர்வுகள் குறித்து தினசரி Update செய்ய வேண்டும்.என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.