தமிழ் திரையுலகை கடந்து உலக அளவில் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தமிழ் திரையுலகை கடந்து உலக அளவில் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. சினிமாத் துறையில் அவர் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் #45YearsOfRAJINISM எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இது மட்டுமின்றி பல பிரபலங்களும் சக நடிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இது தலைவரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், “என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார்”.