கைத்தறி போர்வையில் செய்த பரிசை தோனியை நேரில் சந்தித்து கொடுக்க ஆர்வமாக காத்திருக்கிறார்
ஈரோடு மாவட்டம் சென்னிமலைப் பகுதியைச் சேர்ந்த அப்புசாமி என்ற கைத்தறி தொழிலாளி முதலில் சச்சினுக்கு ரசிகராக இருந்தவர். அவரது ஓய்விற்குப் பிறகு தோனியின் ஆட்டத்தில் ஈர்க்கப்பட்டு அவரது ரசிகராக மாறினார். மேலும் தோனியின் மகளுடன் இருக்கும் உறவை பெரிதும் விரும்புவதாகத் தெரிவித்தார்
இந்நிலையில் தன் கையால் கைத்தறி போர்வையில் செய்த தோனி அவரது மகளோடு இருக்கும் அழகிய ஓவியத்தை தயார் செய்தார். இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் நேரில் சந்தித்து கொடுக்க காத்திருந்தவருக்கு தோனியின் ஓய்வு அதிர்ச்சி அளித்தது. எனினும், நேரில் சென்று அந்த பரிசை கொடுக்க அவர் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்
இதற்கு முன்பு 100 சச்சின் முகம் பதித்த கைத்தறி போர்வையை சச்சினுக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது