சாந்தகுளம் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏர்ப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் தாயாரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சாந்தகுளம் கொலை வழக்கை பற்றி தெரியாதவர்கள் இங்கு இருந்து விடமுடியாது. ஊரடங்கின் முதல் சில வாரங்களில் நடந்தது இந்த சம்பவம். சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கானது மக்களிடயே பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அவர்களின் கொலைக்கு நியாயம் கேட்டு பெரும்பாலும் பலர் போராடினர். அவர்களின் வழக்கு தமிழத்தில் காட்டுத்தீயாக பரவியது. இவர்களின் வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டது. பின்னர் அதுபற்றிய தகவல்கள் பெரிதுமாக பேசப்படவில்லை.
ஆனால் இந்த வழக்கில் இப்போது ஒரு திருப்பம் ஏற்ப்பட்டுள்ளது.ஏற்கனவே சிறைச்சாலை, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், ஏடிஎஸ்பி சுக்லா தலைமையிலான அதிகாரிகள், செல்வராணியை நெல்லை அரசு மருத்துமனைக்கு அழைத்துச்சென்று ரத்த மாதிரி எடுப்பதற்காக அழைத்துச்சென்றனர். இதுபற்றிய கூடுதல் தகவல்கள் கூடிய விரைவில் எதிர்பார்க்க படுகிறது.