பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்குத் தடை.
இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட சண்டையில் இருதரப்பிலும் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதையடுத்து,இந்திய அரசு சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்தது.
இதில் ஷேர், ஹலோ, டிக்டாக் போன்ற பிரபலமான செயலிகளுக்கும் அடக்கம்.
உலகம் முழுவதிலும் டிக்டாக் செயலிகளைக்ப் பயன்படுத்தி வரும் பயனர்களின் எண்ணிக்கை நாள் தோறும் பெருகிக்கொண்டே வந்த நிலையில் இந்தியாவில் மட்டும் 20 கோடி பயனாளர்களைப் பெற்றிருந்த டிக்டாக்க்கிற்கு இதுபெரும் அடியாக அமைந்தது.
பின்னர் அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிகள் தடை செய்யப்பட்டது. தற்போது பாகிஸ்தான் நாட்டிலும் டிக்டாக் செயலிக்குத் தடை செய்யப்பட்டது.
இந்தச் செயலில் சில அநாகரீகமான வீடியோ, காட்சிகள் , வசனங்கள் பகிரப்படுவதாக மக்கள் புகார் அளித்த நிலையில் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
மேலும் சட்டவிரோத ஆன்லைன் பதிவுகளை நீக்கவும் டிக்டாக் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளது பாகிஸ்தான் அரசு.