மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு இன்று காலை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான ஒரே தடுப்பு மருந்து ஊசிகள் என்பதால் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை மெரினா கடற்கரையில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் தனது ட்விட்டர் வெளியிட்டுள்ள பதிவில், மெரினாவில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்கள் படுத்துறங்குவர். இன்று காலை அவர்களுக்கு தடுப்பூசி போடத்துவங்கினோம். அப்போது நெறிக்குறவ இளைஞர் ஒருவர் ” எங்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தி தொலைக்காட்சியில் காட்டச்சொல்லுங்கள், எங்கள் ஊரான மகாராஷ்ட்ராவில் உள்ளவர்கள் எல்லோரும் போட்டுக்கொள்ளட்டும் என கூறியதாகவும் பதிவு செய்துள்ளார்.