விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர்.
விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர்.
பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள பிரபல மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையெடுத்து சிலநாட்களிலேயே அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த்க்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் உறவினர்களும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் விஜயகாந்திற்கு சில நாட்களில் கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை கூறியது. அங்கிருந்தபடியே தன் நண்பரும் பாடகருமான எஸ்பிபி மறைவையொட்டி இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அதேபோல் இந்து முன்னனியின் தலைவர் ராமகோபாலன் மறைவையொட்டி அவருக்கு இரங்கள் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மியாட் மருத்துவமனை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கோவிட் 19 தொற்றால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மருத்துவக்குழுவால் தொடர்மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர்.
இருவரும் கிசிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததன்மூலம் உடல்நிலை யில் நல்ல முன்னேற்ற, அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.