தொப்பை கொழுப்பை குறைக்க, தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் கலந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.
இன்றையக் காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனை, உடல் எடை அதிகரிப்பு. மாறிவரும் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப, மக்களும் தங்கள் வாழ்க்கை முறைகள் மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றி வருகின்றனர். இதன் காரணமாக தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைப்பது என்பது ஏதோ சாதாரண விஷயம் அல்ல. அந்த பிடிவாதமான தொப்பை கொழுப்பை கரைப்பது மிகவும் கடினம். ஆனால், சில வழிகள் மூலம் கொழுப்பை கரைத்து விடலாம்.
ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை உடல் எடையை திறம்பட குறைக்க உதவும்.இதனோடுக் கூட வெறும்வயிற்றில் நீங்கள் குடிக்க வேண்டிய பானம் பற்றி இங்கே காணலாம்.மேலும் இந்த பானத்திற்கு தேவையான அனைத்துமே நம் வீட்டில் நாள்தோறும் உபயோகப்படுத்துகிற பொருள்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
தேவையான பொருட்கள் :
2 டீஸ்பூன் சீரக விதைகள் , 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் மற்றும் 2 டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள்
பானம் தயாரிக்கும் முறை:
அனைத்து பொருட்களையும் ஒரே இரவில் தனித்தனியாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். அடுத்த நாள் காலை, நன்றாக அவற்றை கொதிக்கவைத்து, வடிகட்டி, சூடாறியப் பின்னர்(வெதுவெதுப்பாக), வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்க வேண்டும். பானத்தின் சுவையை அதிகரிக்க சிறிது உப்பு அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
கொத்தமல்லி விதைகள்
கொத்தமல்லி விதைகளில் வைட்டமின் கே, சி மற்றும் பி ஆகியவை நிறைந்துள்ளன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. இதை சேர்ப்பதன் மூலம் எடையைக் குறைக்க உதவுகிறது, மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
சீரக விதைகள்
சீரக விதைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். நாம் அனைவரும் அறிந்தபடி, வளர்சிதை மாற்றம் அதிகமாக இருப்பதால், நீங்கள் அதிக எடை இழக்கிறீர்கள். இது செரிமான செயல்பாட்டை சரிசெய்கிறது. சீரகத்தில் உள்ள செயல் கலவை செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது ஒரு நொதியைத் தூண்டுவதன் மூலம் செரிமான சாறுகளை சிறப்பாக சுரக்க உதவுகிறது.
பெருஞ்சீரக விதைகள்
பெருஞ்சீரக விதைகள் நார்ச்சத்து நிறைந்தவை, கொழுப்பு அதிகரிப்பதை தடுக்கிறது. பெருஞ்சீரக விதைகள், உடலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதையும் மேம்படுத்துகின்றன. சோம்பை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளும் போது வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும்.